முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் மாணவி மானபங்கம்: சினிமா நடிகர் கைது

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

கோவை,பிப்.8 - மொபட்டில் சென்ற கல்லூரி மாணவியை இடித்து தள்ளி துப்பட்டாவை பிடித்து இழுத்து கோவை கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த சினிமா நடிகர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பின்னர் மாணவி தனது தோழி ஒருவருடன் ஸ்கூட்டியில் கோவை பாரதி பார்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில்  விரட்டி வந்தனர். வாலிபர்கள் 2பேரும் மாணவியையும், அவரது தொழியையும் கேலியும், கிண்டலும் செய்ததாக தெரிய வருகிறது. சாய்பாபா காலனி சிந்தாமணி நகரில் வந்த போது வாலிபர்கள் அட்டூழியம் அதிகமானது. திடீரென்று ஸ்கூட்டி மீது மோட்டார் சைக்கிளை மோத விட்டனர். இதனால் மாணவியும் அவரது தோழியும் நிலை தடுமாறி ரோட்டில் கிழே விழுந்தனர். இந்த நேரத்தில் வாலிபர்களில் ஒருவர் மாணவி மீனாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ள“ர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். வாலிபர்கள் 2பேரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இதனால் பெருங்கூட்டம் கூடியது.

பொது மக்களின் நடவடிக்கையில் திருப்தியடையாத மாணவியும், தொழியும் மன வேதனையுடன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் சென்று அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு-விடம் தங்கள் 2பேரையும் நடு ரோட்டில் 2 வாலிபர்கள் கிழே தள்ளி விட்டு மானபங்கம் செய்தனர். எனவே அந்த 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு வில் தெரிவித்திருந்தனர்.

அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டரும், போலீசாரும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியையும், அவரது தோழியையும் மானபங்கம் செய்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரித்ததில் 2 வாலிபர்களும் சாய்பாபா காலனி சிந்தாமணி நகரைச் சேர்ந்த அஜய் பிரதீப் (27) என்றும் மற்றொருவர் அவரது நண்பர் ஈஸ்வரன் என்றும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான அஜய் பிரதீப் 18 வயது புயலே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள“ர். 

சினிமா நடிகர் மீதும் அவரது நண்பர் மீதும் 341 (பெண்களை தடுத்து நிறுத்துதல்) 354 ஆபாசமாக திட்டி மானபங்கம் செய்தல்)  ஈவ்டீசிங் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்தனர். கைதான 2பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்ல தயாரானார்கள். அப்போது நடிகர் அஜய் பிரதீப் கண் கலங்கினார். போலீசாரிடம் நான் வளர்ந்து வரும் நடிகன், சென்னையில் தங்கி படவாய்ப்பு தேடி வந்தேன். எனது தந்தைக்கு உடல் நலமில்லை என்ற தகவல் வந்ததால் கோவை வந்தேன். வந்த இடத்தில் நண்பருடன் சேர்ந்து அறியாமல் தவறு செய்து விட்டேன். இனிமேல் இது போன்று தவறு செய்ய மாட்டேன் என்று கெஞ்சினார். ஆனால் போலீசார் அஜய் பிரதீப்பை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நடிகர் அஜய் பிரதீப் மேகமழை என்ற படத்தில் கதாநாயகனாகவும், மின்சாரம் என்ற படத்தில் துணை நடிகராகவும் நடித்துள்ள“ர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவி மற்றும் அவரது தோழியை நடு ரோட்டில் மானபங்கம் செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago