எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.-9 - நாயகன் கமல் இந்திய உளவுதுறையை சேர்ந்தவர். தன்னுடைய இளம் மனைவி பூஜா குமாருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கே அய்யர் இனத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். பூஜா மருத்துவ ஆராய்ச்சி படிக்கிறார். பூஜாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க கமலுக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதை கண்டறிய ஒரு ஆங்கிலேய நபரை நியமிக்கிறார். பூஜை அந்த நபர் கமல் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்கிறார். அப்போது கமல் திடீரென முஸ்லீம் வேடமிட்டு இருக்கும் ஒரு காட்சியை பூஜா காதலன் கண்டுபிடிக்க அதை பூஜாவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் பூஜா - கமல் இடையே இந்து, முஸ்லீம் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பூஜாவின் காதலரும் முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என்பது தெரிகிறது.
இந்நிலையில் காஸ்மீர் தீவிரவாதிகள் பிடியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கமல், பூஜா மற்றும் பூஜாவின் காதலன் சலீம் சிக்கி கொள்கிறார்கள். அப்போது தீவிரவாதி காஷ்மீர் போலீஸ் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சலீமை சுட்டுத்தள்ளுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு தலைமையாக இருக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி உமர் குருஸ்க்கு கமல், பூஜாவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகள் கமலை சுடவேண்டாம், முட்டிக்கு கீழே சுடு, அவன் உயிருடன் வேண்டும் என்று தீவிரவாதிகளுக்கு உத்தரவு போடுகிறார் உமர். அப்போது நான் தொழுகை செய்ய வேண்டும் என் கைகட்டை கொஞ்சம் அவிழ்த்து விடுங்க என்று தீவிரவாதிகளிடம் கெஞ்சுகிறார். கமல் கைகட்டை அவிழ்த்து விடுகிறார்கள். உடனே தீவிரவாதிகளை தாக்கிவிட்டு பூஜாவை அழைத்து கொண்டு தீவிரவாதிகள் பிடியிலிருந்து கமல் தப்பிக்கிறார். பிறகுதான் தாலிபான் தீவிரவாதியாக மாறியது ஏன், தீவிரவாதிகளுடன் பயிற்சி எடுத்து, அதன் மூலம் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்தது எப்படி என்பதை தனது மனைவி பூஜாகுமாரிடம் பிளாஸ்பேக் காட்சிகளாக விவரிக்கிறார் கமல்.
தொடக்க காட்சியில் பரதநாட்டிய மாஸ்டராக வரும் கமல். பெண்மை கலந்த தோற்றத்தில் நளினமாக நடந்து வரும்போது நடிப்பில் அசத்திவிடுகிறார். அடுத்த பரதம் கற்கும் அய்யர்வீட்டு பெண்களுக்கு சிக்கன் கறி கொடுப்பது தியேட்டரை கலகலக்க வைக்கிறது. விஸ்வநாத் என்ற பெயரை வைசம் அகமத்காஷ்மீரி என்று மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தீவிரவாதியா தோற்றத்தை அமைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளின் தலைவன் உமர் குப்பல் நுழைந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் மோதும் காட்சிகள் சூப்பர்.
கமலை பார்த்து அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமாக இருப்பாங்க, உன்னமாதிரி என்று உமர் சொல்கிறார். உடனே அப்பா யார் என்றே தெரியாமல வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க, உன்ன மாதிரி என்று உமரை பார்த்து கமல் பேசும்போது கைதட்டல் பறக்கிறது.
அதைபோல உன்னை கடவுள்தான் காப்பாத்தனும் என்று மனைவி பூஜாகுமார் கூறும்போது எந்த கடவுள் என்று கமல் கேட்பது மூன்று கடவுள்களும் முகம் சுழிக்கும் கேள்வி. இப்படி படம் முழுக்க ரசிக்க கூடிய வசனங்கள் ஏராளம். படத்துக்கு மிகப்பெரிய பலம் தமிழ் நடிகர்களில் நாசரை தவிர மற்ற நடிகர்கள் இல்லாதது. நாயகி பூஜாகுமார் இளமை துள்ளலோடு அய்யர் ஆத்து பெண்ணாக கலக்கி இருக்கிறார். அவ்வப்போது கணவரை சந்தேகப்படும் காட்சி, கமலுக்கு காயம் ஏற்படும்போது முதல் உதவி செய்யும் ஆண்ட்ரியாவிடம் பூஜா காட்டும் முறைப்பு அருமை. இதே போல நாசர், ராகுல் போஸ், சேகர் கபூர், அப்துல் திவாரி, ஹயத் ஆசீப் என படத்தில் நடித்திருக்கு அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
சானுஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சிட வைக்கிறது. அமெரிக்கா, லண்டன், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என அனைத்தும் புதுமை. மகேஷ் நாராயணன் எடிட்டிங் விறு விறுப்பை தருகிறது. சங்கர் சொன்லாய் இசையில் பாடல் மற்றும் பின்னணி அருமை. பாடல்கள் வைரமுத்து, கமல்ஹாசன், தயாரிப்பு சந்திரஹாசன், கமல்ஹாசன் இணை தயாரிப்பு பி.வி.பி.சண்முகம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கமல்ஹாசன். மனதில் பட்டதை சமூக கண்ணோட்டத்துடன் துளியும் பயமின்றி படத்தை இயக்கியிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை மனதார பாராட்டலாம். படம் வெளிவருவதற்கு முன்பே விஸ்வரூபம் எடுத்தவர்களை புஷ்வானமாக்கியிருக்கும் நிஜரூபம் விஸ்வரூபம். க்லைமாக்சில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் என்று கிளு கிளுப்பான காட்சியை ரசிகர்களுக்கு காட்டி கலகலப்பாக முடித்திருக்கிறார் கமல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.