எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா, ஏப். 21 - 3 செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த வெற்றி இந்திய விஞ்ஞானிகளை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. இந்தியாவில் உள்ள இயற்கை வளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் அளவு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக ஆய்வு செய்ய ரிசோர்ஷ் சாட்2 என்ற செயற்கை கோளை தயாரித்தனர். இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவும் பணி தொடங்கியது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-16 என்ற நவீன ராக்கெட் உருவாக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவும் பணி நேற்று காலை சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. சரியாக 10.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கிக் கொண்டு அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டின் 3 பாகங்களும் திட்டமிட்டபடி பிரிந்தன. இதையடுத்து ராக்கெட் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சரியாக சென்றது. இதனால் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ரிசோர்ஷ் சாட் செயற்கை கோளுடன் யூத் சாட், எக்ஸ் சாட் ஆகிய 2 சிறிய ரக செயற்கை கோள்களும் அனுப்பப்பட்டன. ராக்கெட் பறந்து சென்ற 18வது நிமிடத்தில் 3 செயற்கை கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்தன. nullமியில் இருந்து 822 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டன. 3 செயற்கைக் கோள்களும் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
ரிசோர்ஷ் சாட்2 செயற்கை கோள் இந்தியா தயாரிப்பாகும். இது மொத்தம் 1,206 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் 18வது செயற்கை கோளான இது சூரிய சக்தி மூலம் தானாக இயங்கும். ரிசோர்ஷ் சாட் செயற்கைக் கோளின் 3 நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கோமிராக்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
மற்றொரு செயற்கை கோளான யூத் சாட் இந்தியா-ரஷியாவின் கூட்டு தயாரிப்பாகும். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள மாணவர்கள் இந்த செயற்கை கோளை உருவாக்கினார்கள். 92 கிலோ எடை உள்ள இந்த செயற்கை கோள் மூலம் சூரிய கதிர் வேறுபாடுக்கும், காற்று மண்டல உயர்தட்டு பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
3வது செயற்கைக்கோள் எக்ஸ்சாட் எனப்படும். இந்த செயற்கை கோள் 106 கிலோ எடை கொண்டது. இது சிங்கப்nullர் நாட்டின் முதல் செயற்கை கோளாகும். இந்த செயற்கை கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி படம் பிடிப்பதற்கு உதவும் பணியை செய்ய உள்ளது.
இந்தியா ஏற்கனவே ரிசோர்ஷ் சாட்1 என்ற செயற்கைகோளை 2003ம் ஆண்டு விண்ணில் ஏவி இருந்தது. அதன் ஆயுள் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து ரிசோர்ஷ் சாட்2 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் முந்தைய ரிசோர்ஷ் சாட்1ன் பணிகளையும் சேர்த்து செய்யும்.
கடந்த ஆண்டு இந்தியா அனுப்பிய 2 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப் 06 ராக்கெட்டும் அதன் பின்னர் டிசம்பர் மாதம் 25ந்தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டும் நடுவானில் வெடித்து சிதறின. இதனால் இந்திய விஞ்ஞானிகள் மிகவும் கவலையுடன் இருந்தனர்.
இவர்களது கவலையை போக்கும்விதமாக ன்று அனுப்பப்படும் ராக்கெட் என்ன ஆகுமோ? என்ற வேதனை அவர்களிடம் இருந்தது. ஆனால் ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததை அடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதாகிருஷ்ணன் விஞ்ஞானிகள் அனைவரையும் கை குலுக்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறும் போது, இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஊக்கத்தால் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். 2 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் நாம் அனுப்பி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு சர்வ தேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். மத்திய மந்திரி நாராயண சாமி ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டார். அவர் கூறும்போது, இந்த ராக்கெட்டை வெற்றி கரமாக ஏவி இருப்பது இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்திய விஞ்ஞானிகள் தங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். இதற்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங், சேனியா காந்தி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறார்கள் என்றார். இந்தியா இதுவரை பி.எஸ்.எல்.வி. வரிசையில் 18 ராக்கெட்டுகளை ஏவி உள்ளது. இதில் முதல் ராக்கெட் 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ந் தேதி ஏவப்பட்டது. அது மட்டும் தோல்வி அடைந்தது. மற்ற அனைத்து ராக்கெட்டுகளுமே வெற்றிகரமாக பறந்து உள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 44 மீட்டர் உயரம் 295 டன் எடை கொண்டது. இதில் 1,600 கிலோ வரையிலான செயற்கை கோள்களை ஏவ முடியும். இந்தியா இதுவரை 44 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி உள்ளது. அதில் 25 செயற்கை கோள்கள் வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டன. மற்ற அனைத்து செயற்கை கோள்களையும் இந்தியாவே சொந்தமாக ஏவி உள்ளது. 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் செயற்கை கோளும், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.