முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புறப்பட்டார் அழகர் - இன்று காலை மலையை அடைகிறார்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.22 - மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட அழகர் இன்று காலை மலையை அடைகிறார். அங்கு பெண்கள் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து வழிபாடு செய்கிறார்கள். மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டு சித்திரை திருவிழா துவங்கியது. தினமும் மீனாட்சி, சுந்தரேசுவரர்- ப்ரியாவிடை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கடந்த 16 ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண காட்சியை பார்த்து பரவசம் அடைந்தனர். இதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழா முடிவடையும் நிலையில் கடந்த 16 ம் தேதி அழகர்மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து  இருந்து புறப்பட்டார்.

    இதை தொடர்ந்து அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி கடந்த 18 ம் தேதி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு அழகர் பெருமான தரிசித்தனர். இதை தொடர்ந்து அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து  சேஷ வாகனத்தில் புறப்பட்ட அழகர் வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபம் வந்தார். அங்கு மதியம் 2 மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளித்தார். இதை தொடர்ந்து பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு ராமராயர் மண்டபத்திற்கு வந்த அழகர் அங்கு விடிய, விடிய தசாவதார காட்சியில் தோன்றினார். முதலில் முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்மவதாரம், ராமவதாரம், கிருஷ்ணவதாரம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார்.

   பின்னர் மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில்  இருந்து புறப்பட்ட அழகர் பின்பு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில்  திருக்கண்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார். நேற்று அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட அழகரை வழியனுப்பி வைத்தனர்.  அழகர் மீண்டும் பல்வேறு திருக்கண்களில் எழுந்ருளி நேற்று இரவு மூன்றுமாவடி வந்தார். இன்று (வெள்ளி) காலை 10மணிக்கு அழகர், அழகர்கோவிலை அடைகிறார். அங்கு பெண்கள் திரண்டு வந்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். 23ம் தேதி உற்சவசாந்தியுடன் அழகர் திருவிழா நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago