முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ரேவதிக்கு வக்கீல் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - மனநலம் குன்றிய குழந்தையை சித்ரவதை செய்வதாக அந்த குழந்தையின் தாயார் நடிகை ரேவதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:

சென்னை எழும்ரில் வசிப்பவர் ஆஷா பணிக்கர். இவர் சதீஷ்மேனன் என்பவர் மனைவி. இருவரும் விவாக ரத்து செய்து பிரிந்துள்ளனர். நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ்மேனனின் அண்ணன் தான் சதீஷ்மேனன். 

நடிகை ரேவதி, சுரேஷ்மேனன், சதீஷ்மேனன் ஆகிய மூவருக்கும் ஆஷா பணிக்கர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:​ 

எனது மகன் உதய்க்கு 23 வயது ஆகிறது. மனநலம் குன்றிய அவன் தற்போது சதீஷ் மேனனுடன் வசிக்கிறான். உதய்க்கு சரியான சிகிச்சை அளிக்காமல் சித்ரவதை செய்யப்படுவதை அறிந்தேன். பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. தலையில் ஹெல்மெட் போட்டு சித்ரவதை செய்யப்படுகிறான். சதீஷின் மூதாதையர் சொத்தில் என் மகன் உதய்க்கு பங்கு உள்ளது. ஆனால் விற்ற சொத்துக்களில் இருந்து உதய் பெயரில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை. உதய்க்கு சுரேஷ்மேனனை பணம் கொடுக்கவிடாமல் நடிகை ரேவதி தடுக்கிறார். வெளியே மனநலம் குன்றியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் விளம்பரப்படுத்தும் அவர் உள்வீட்டில் மனநலம் குன்றிய குழந்தைக்கு உதவி செய்ய மறுக்கிறார். உதய்யை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். மருத்துவ செலவாக 4 1/2 கோடி ரூபாயை அவன் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு காரும் ஒன்றரை கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும். 

இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டு வக்கீல் தினேஷ் ராஜ்குமார் மூலம் இந்த நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்