முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயரும்!

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 16 - வருமானவரி உச்சவரம்பு தற்போது ஆண்டுக்கு ரூ. 2 லட்சமாக உள்ளது. இந்த உச்சவரம்பு ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளன. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னால் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரி உச்சவரம்பை ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கருத்துக்கள் கூறப்பட்டதாக தெரிகிறது. 

இதை ஏற்று அந்த உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதாவது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகும் என்று தெரிகிறது. அவ்வாறு வெளியானால் அதன் மூலம் நடுத்தர மக்கள் குறிப்பாக மாதச் சம்பளம் பெறுவோர் பயனடைவார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்