முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுடாவின் ஆலோசனையின் பேரில் ஷெட்டர் செயல்படுகிறார்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், பிப். 17 - காவிரி விவகாரத்தில் தேவகவுடாவின் ஆலோசனை பெற்றே முதல்வர் ஷெட்டர் செயல்படுகிறார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரில் கர்நாடக ஜனதா கட்சியின் மாநில இளைஞர் பிரிவின் தலைவராக ஜகதீஷ் ஹிரோமணியை நியமித்து எடியூர்பபா பேசியதாவது, 

முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி விவகாரத்தில் நான் மைசூரில் இருந்து பெங்களூர் வரை நடைபயணம் மேற்கொண்டதை விமர்சித்தார். எனது நடை பயணத்தால் காவிரி விவகாரத்தில் என்ன திருப்பம் ஏற்படப் போகிறது என்று கேலி செய்தார். ஆனால் அவர் இதே விஷயத்திற்கு பெங்களூரில் பன்னப்பா பூங்காவில் இருந்து சுதந்திர பூங்கா வரை நடைபயணம் மேற்கொண்டார். இதனால் காவிரி விவகாரத்தில் எந்த விளைவும் ஏற்படவில்லை. 

காவிரி விவகாரத்தில் தேவகவுடாவின் ஆலோசனை பெற்றே முதல்வர் ஷெட்டர் செயல்படுகிறார். எனவேதான் காவிரி கரையோரத்தில் உள்ள மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார் ஷெட்டர். காவிரி விவகாரத்தில் கவுடா அரசியல் நாடகம் ஆடுகிறார். பா.ஜ.க மற்றும் ம.ஜ.த ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்