முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி வளர்ச்சிக்காக கூட்டாக செயல்படுங்கள்: ராகுல் அறிவுரை

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 17 - கோஷ்டியை தவிர்த்து கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டாக பணியாற்றுங்கள் என்று டெல்லியில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார். 

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள் உள்ளடக்கிய தலைவர்கள் ஆகியோருடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு, காங்கிரஸ் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, 

கட்சியின் நலனுக்காக நாம் அனைவரும் ஒத்துழைப்போடும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும். மாநில அளவில் கட்சியின் நலனுக்கு எது சரி என்பதை நீங்கள்தான் அறிவீர்கள். அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவேன். அதனால் கோஷ்டியை தவிர்த்து கூட்டாக செயல்படுங்கள் என்றார். 

இந்த கூட்டம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், 

காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தியுடன் பேசவும் கட்சியின் நிலைமையை விளக்கவும் மிக சிறந்த வாய்ப்பாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கட்சியின் நலனே முக்கியம் என்பதால் அதை நோக்கியே கட்சி தலைவர்கள் தொண்டர்களின் கவனமும் செயல்பாடும் இருக்க வேண்டும் என்று ராகுல் அறிவுறுத்தினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்