முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,பிப்.17 - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. செல் மற்றும் இணையதளம் சேவையும் தொடங்கியது. 

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதட்டம் ஏற்பட்டதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்தநிலையில் ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா நினைவிடத்திற்கு ஊர்வலமாக செல்ல பிரிவினைவாதிகள் அறிவித்திருந்தனர். இதனால் வன்முறை சம்பவம் எதுவும் நடக்கும் என்று கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் காஷ்மீர் பள்ளதாக்கில் அமைதி திரும்பியதால் ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டது. அதோடுமட்டுமல்லாது செல், நெட் சர்வீஸ் மீண்டும் தொடங்கியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அமைதி நிலவிகிறது. வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துள்ள நிலையிலும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. வடகாஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத்தளமான குல்மார்க் பகுதியில் 7 இஞ்சி பனிப்பொழிவு இருந்தது. காலநிலை மைனஸ் 7 டிகிரியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்