முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியநல்லி கற்பழிப்பு: முக்கிய புள்ளி சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

கோட்டயம்,பிப்.17 - சூரியநல்லியில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று 40 நாட்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம் மூணாறு அருகே பெரியகாணல் தேயிலை எஸ்டேட்டுக்கு மேலே சூரியநல்லி உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்திக்கொண்டு ஊர் ஊராக சென்று கற்பழித்துள்ளனர். இந்த கற்பழிப்பு வழக்கில் 35 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தண்டிக்கப்பட்டவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம்கோர்ட்டானது ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததோடு இந்த கற்பழிப்பு வழக்கை புதிய கோணத்தில் விசாரிக்குமாறும் கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இந்த கற்பழிப்பு வழக்கில் கேரள மாநிலம் காங்கிரஸ் தலைவர் குரியன் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாக தெரிகிறது. சோனியா காந்தியை சந்தித்தும் விளக்கம் அளித்தார். 

இந்தநிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான தர்மராஜன் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரை நேற்று கேரள போலீசார் கோட்டயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோட்யம் துணைச்சிறையில் அடைக்கும்படி மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்