முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய உள்துறை அமைச்சரின் மருமகன் கார் திருட்டு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, பிப். 18 - மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகனுடைய காரை திருடி விட்டனர். இதனால் மும்பையில் பரபரப்பு நிலவுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகனுடைய சொகுசுக் காரை யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்துள்ளனர். மும்பையில் 3000 க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அதில் இதுவரை 20 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளே தீர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஷிண்டே மருமகன் காரை யாரோ திருடி விட்டனர். இதனால் மும்பை போலீஸார் ஆடிப் போயுள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க தற்போது மும்பை குற்றவியல் போலீசாரையும் களத்தில் இறக்கியுள்ளனர். வழக்கமாக இவர்கள் கொலை வழக்கை மட்டுமே விசாரிப்பார்கள். ஆனால் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமல்லாமல், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் என்பதாலும் விசேஷமாக இவர்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளதாம் மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு.

மத்திய மும்பையில் டெலிஸ்லே சாலையில், நிறுத்தப்பட்டிருந்தது ஷிண்டே மருமகன் ராஜ் ஷ்ராபுக்குச் சொந்தமான கார். அதைத்தான் யாரோ நேற்றுமுன்தினம் இரவு திருடி விட்டனர். ஷிண்டேவின் மகள் ப்ரீத்தியைத்தான் கட்டியுள்ளார் ஷ்ராப்.

சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போய் விட்ட காரைத் தேடி வருகிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்