முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பிரதமராவதற்கு மாயாவதிக்கு விருப்பமாம்!

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

நாகபுரி, பிப். 19 - அடுத்த மக்களவை தேர்தலுக்கு பிறகு தாம் பிரதமராவதற்கு மாயாவதி விருப்பம் தெரிவித்திருக்கிறார். மகராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பகுஜன் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், அடுத்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையாற்ற முடியும். பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் இணைந்து சதி செய்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மத்தியில் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கருக்கும், ஜோதிராவ் புலேவுக்கும் மகராஷ்டிரத்தில் நினைவு மண்டபங்களும், அருங்காட்சியகங்களும் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் கான்ஷிராமுக்கு நினைவகம் எழுப்பப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்