முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகலாந்து அமைச்சர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

கொஹிமா, பிப்.20 - நாகலாந்து மாநில உள்துறை அமைச்சர் இம்காங் இம்சென் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆயுதங்கள், ரொக்கம் ரூ.1.1 கோடி ஆகியவற்றை சட்ட விரோதமாகக் காரில் கொண்டுசென்ற அவரை போலீஸார் கைது செய்தனர். நாகலாந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மோகோக்சங் மாவட்டத்திலுள்ள, தனது கொரிடங்கா தொகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

வோகா மாவட்டச் சோதனைச் சாவடியில் அசாம் ரைபிள் படையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.  அமைச்சரின் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.1.1 கோடி பணம், ஆயுதங்கள், 2 துப்பாக்கிகள், 5 கை துப்பாக்கிகள் வெடிபொருள்கள், மதுபாட்டில்கள் ஆகியவை  அமைச்சரின் காரிலிருந்து எடுக்கப்பட்டன. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்தியதுடன், போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார்  அமைச்சரை கைது செய்தனர். அவர் மீது ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பகிவு செய்யப்பட்டுள்ளது.  

பிப்ரவரி 23-ம்தேதி நடைபெற உள்ள நாகலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அமைச்சர் இந்த பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்