எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.23 - சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணியோ துவக்கத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறியது.முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப்போட்டிக்காக 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி 2 தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
ஹென்ரிக் டெஸ்டில் அறிமுகம் ஆனார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து சுழற்பந்து வீரர் ஒஜா நீக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டிலும் விளையாடிய அவர் ஹர்பஜன்சிங்குக்காக கழற்றிவிடப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு 100வது டெஸ்ட் ஆகும். வேகப்பந்து வீரர்களில் இஷாந்த்சர்மா, புதுமுக வீரர் புவனேஸ்வர்குமார் இடம் பெற்றனர். தொடக்க வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் தேர்வானார்.
சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது.
நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கோவனும் வார்னரும் களமிறங்கினர். இருவரும் மிக நிதானமாக ரன்கள் எடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோவன் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்த வார்னருடன் ஹியூஸ் கை கோர்த்தார். ஆனால் ஹியூஸ் சிறிது நேரம் கூட நிற்கவில்லை. அந்த அணி 72 ரன்களை எட்டிய நிலையில் அஸ்வின் பந்து அவுட் ஆனார். 15 பந்துகளை சந்தித்த ஹியூஸ் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். களத்தில் தொடர்ந்து நின்ற வார்னருடன் வாட்சன் இணைந்தார். இருவரும் இணைந்து 50 ரன்கள் வரை சேர்த்தனர். 34.4 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை எடுத்திருந்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். வாட்சனைத் தொடர்ந்து கேப்டன் கிளார்க் களத்துக்கு வந்தார். கிளார்க்கும் வார்னரும் இணைந்து கூடுதலாக 5 ரன்களை எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மொத்தம் 93 பந்துகளை சந்தித்து 59 ரன்களை சேர்த்திருந்தார். இதைத் தொடர்ந்து கிளார்க்குடன் வேட் கை கோர்த்தார். அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. 35 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்து அவுட் ஆனார். 47 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியால் 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இவர்கள் அனைவரின் விக்கெட்களையும் அஸ்வின் சாய்த்தார். ஸ்டார்க் 3 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார் .
47வது ஓவரின் போது அஸ்வின் 18 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஹர்பஜன்சிங் உட்பட மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை.
95 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணியில் கிளர்க் சதம் அடித்தார். அவர் 169 பந்துகள் எதிர்கொண்டு 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிட்டில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இரு அணி வீரர்கள் வருமாறு:
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், முரளி விஜய், புஜாரா, தெண்டுல்கர், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன்சிங், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா.
ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், எட்கோவன், ஹியூக்ஸ், வாட்சன், வாடே, ஹென் ரிக்ஸ், பீட்டர் சிடில், மைக்கேல் ஸ்டார்க், பேட்டின்சன், நாதன் லயன்.
நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), எராமஸ் (தென் ஆப்பிரிக்கா). டெவிலிசன் நடுவர்: குல்கானி (இந்தியா). மேட்ச் நடுவர்: பிராட் (இங்கிலாந்து).
ரசிகர்கள் கூட்டம் குறைவு:
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்றைய ஆட்டத்தின்போது இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதின. 4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய போட்டியை காண ரசிகர்களின் இடையே ஆர்வம் இல்லை. ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஸ்டேடியத்தின் பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது. குறைந்த அளவிலேயே ரசிகர்கள் இருந்தனர். சேம்பாக்க ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதால் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருந்ததாக கருதப்படுகிறது. இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் திரளாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும்(சனி)நாளையும் , (ஞாயிற்றுக் கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து