முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் குண்டு வெடிப்பு: தகவல் கொடுத்தால் ரூ. 20 லட்சம்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், பிப். 24 - ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

இரடடை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன் அந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டோ அல்லது இரு சக்கர வாகனத்தையோ, சைக்கிளையோ நிறுத்துமிடங்களில் நிறுத்தியதைப் பார்த்திருந்தாலோ பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றார். மேலும் தகவல் அளிக்கும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். விசாரணையின் போது அந்த நபர் அளித்த தகவலின் தன்மைக்கேற்ப ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்