முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்திற்கு எதிராக கட்சிகள் ஒன்றுபட வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், பிப். 25 - பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேச பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், 

ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகள் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மதத்தின் பெயரால் நாட்டு மக்களை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள் நம் எதிரிகள். இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும். அதன் நிலைத்தன்மையை குலைக்க வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம் என்றார்.

ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புக்கு பின்னரும் அதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் வகையில்தான் உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசி வருகிறார். உளவுத்துறை தகவல் கிடைத்தும் கடந்த 21 ம் தேதி தாக்குதலை தடுக்க கிரண்குமார் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் கண்காணிப்பு கேமிராக்களில் சில செயல்படாமல் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago