முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்தாண்டு 8 ஆயிரம் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.26 கடந்தாண்டு மட்டும் நாட்டில் 8 ஆயிரத்து 805 திருநங்கைகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் உள்ள குடிமகனை அடையாளம் தெரிந்துகொள்வதற்கும் நாட்டில் எங்கு சென்றாலும் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் தேசிய அடையாள அட்டை நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை  10 கோடி பேருக்கும் மேலாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2010-ம் ஆண்டு 96 திருநங்கைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2011-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 554 திருநங்கைகளுக்கும் கடந்தாண்டு 8 ஆயிரத்து 805 திருநங்கைகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டைகள் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்