முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு தனித் தேர்வு: தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுதும் மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தன. விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தக்கல் திட்டத்தில் 6, 7 -ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மட்டுமே எழுத்துத்தேர்வு எழுத முடியும். இதர பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

சூசூசூ.க்ஷகிடீ.சிடூ.டூடுஷ.டுடூ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் 8 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வுத்துறை அரசுத்தேர்வுகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெறலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்