எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - தமிழ்நாட்டில் 5 கட்டங்களாக நடக்க உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் முதல் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முதல் நிலையில் உள்ள 22 ஆயிரத்து 192 சங்கங்களுக்கான 4 கட்டத்தேர்தல்களுக்கான முறையான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர 14 செயற்பதிவாளர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற்பதிவாளர்களான பால் வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குநர், மீன் வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர், பதிவாளர் (வீட்டு வசதி) சமூக நலத்துறை இயக்குநர், கதர் கிராமத் தொழில்துறை ஆணையர், வேளாண்துறை இயக்குநர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22532 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தமிழக அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன் ஆணையராக ம.ரா.மோகன் பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தல் ஆணையம்தான் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது நடத்த உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதைப் போல கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இரண்டாம் நிலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயல்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஐந்தாம் நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
முதல் நிலையில் தேர்தல் நடத்தப்படவுள்ள 22192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தில் 5855 சங்கங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 5603 சங்கங்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 5481 சங்கங்களுக்கும், நான்காம் கட்டத்தில் 5253 சங்கங்களுக்கும் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் 5.4.2013 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 12.4.2013 அன்றும், மூன்றாம் கட்ட தேர்தல் 19.4.2013 அன்றும், நான்காம் கட்ட தேர்தல் 27.4.2013 அன்றும் நடைபெறவுள்ளது.
தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார். தற்போது கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர். என்றும் அவர் கூறியுள்ளார். முதல் நிலைக்கான தேர்தல் நடைமுறைகள் 4.3.2013 தேதி தொடங்கி முடிகிறது.
முதல் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் 4 கட்டங்களாக நடக்க உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
முதல் நிலையில் உள்ள 4 கட்டத் தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன்தினம் (மார்ச 4 -ம் தேதி ) அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நிலையில் உள்ள 4 கட்ட தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
முதல் நிலைத் தேர்தல்களில் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியால் வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் மற்றும் 2 -வது கட்ட தேர்தல்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், மூன்றாம் கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், நான்காம் கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் வெளியிடப்படவுள்ளது.
முதல் நிலைக்கூட்டுறவு உறுப்பினர்களின் பட்டியலை சங்கம் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியே முதல், 2 -வது கட்டங்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.1-ம் தேதியும் 4 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் உறுப்பினர் பட்டியலை வெளியிடுவார்.
முதல் நிலைக் கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கும் 4 கட்டங்களிலும் வாக்காளர் பட்டியில் உள்ள குறைகள் முதல் கட்டத்திற்கு மார்ச் 25 -ம் தேதியும், இரண்டாம் கட்டத்திற்கு 26 -ம் தேதியும், மூன்றாவது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு ஏப் 6 -ந் தேதியும் தெரிவிக்க வேண்டும்.
குறைகள் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முதல் கட்டத்திற்கு இம்மாதம் 26 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு 29 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு ஏப் 9 -ம் தேதியும் முடிவு எடுப்பார்.
இறுதி வாக்காளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 27 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.6 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும் வெளியிடப்படும். வேட்புமனுக்கள் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 27 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.1.ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.15.ம் தேதியும், காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளரின் மனுக்கள் பரிசீலனை முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப். 4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.9 ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப் 15 -ம் தேதியும் மாலை 4 மணியிலிருந்து 5.30 மணி வரை நடக்க உள்ளது.
வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும் 2 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப். 15 -ந் தேதியும் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது முதல் கட்டத்திற்கு இம்மாதம் 30 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும் 4 மணிக்குள் நடைபெறும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு 30 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ந் தேதியும், மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு தேவையானால் முதல் கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.19 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.27 -ம் தேதியும் நடக்கும்.
வாக்கு எண்ணிக்கை முதல் கட்டத்திற்கு ஏப்.9 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.30 -ந் தேதியும் நடக்கும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே அறிவிக்கப்படும்.
சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முதல் கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும, 2 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.30 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு மே.6 -ம் தேதியும் நடக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.