எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.7 - சென்னையில் கப்பல் ஊழியர்கள் 6 பேர் பலியான வழக்கில் பிரதீபா கப்பல் கம்பெனி இயக்குநர்களான அண்ணன், தம்பியை புனேயில் போலீார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி சென்னையை நீலம் புயல் தாக்கிய போது பிரதீபா கப்பல் தரை தட்டி மெரினா கடலில் கரை ஒதுங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்ற போது 6 பேர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் பலரை மீனவர்கள் கடலில் நீந்திச் சென்று காப்பாற்றினார்கள். தரை தட்டிய கப்பல் நீண்ட போராட்டத்துக்கு பின் நடுக்கடலுக்கு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது.
6 பேர் பலியானதற்கு கப்பல் நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. கப்பல் நிறுவனம் ஊழியர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்ய தனியார் ஏஜென்சிக்கு காண்டிராக்ட் விட்டு இருந்தது. அந்த ஏஜென்சிக்கு கப்பல் நிறுவனம் பணம் பாக்கி வைத்திருந்ததால் அது உணவு சப்ளை செய்வதை நிறுத்தி விட்டது. இதனால் ஊழியர்கள் உணவு இல்லாமல் நடுக்கடலில் கப்பலிலேயே தவித்தனர். கப்பல் ஊழியர்களுக்கும் பல மாதங்களாக சம்பளம் தராமல் காலம் கடத்தி வந்தது.
மேலும் அந்த கப்பல் காலாவதியானது. லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தது என்று தெரிய வந்தது. கப்பலில் மாதக் கணக்கில் தவித்த ஊழியர்களை மீட்க கப்பல் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெடுத்து கப்பல் நிறுவனம் மீது சென்னை பெசன்ட் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கப்பலுக்கு உணவு சப்ளை செய்யும் ஏஜென்சி ஊழியர்கள் 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். கப்பல் கேப்டன் மற்றும் உயிர் தப்பிய ஊழியர்களிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தினார்கள். கப்பலில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று கூறி நிர்வாகிகள் 5 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கப்பல் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கப்பலை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கப்பல் சென்னை துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை. இதனால் உயிரிழந்தவர்களில் ஒருவரான நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி, பாரதி ஆகியோர் சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள புளியமங்கலத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
மகனை கஷ்டப்பட்டு கப்பல் என்ஜினீயருக்கு படிக்க வைத்த அவர்கள் மகன் அனுப்பிய சம்பளத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கப்பல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததால் வழக்கு செலவும் ஏற்பட்டது. மகன் சம்பள பணம் கிடைக்காத நிலையில் நிவாரணமும் கைக்கு கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் நிரஞ்சனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நிவாரணம் பெற்றுத் தராததால் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் மீதும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 6 பேர் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.
கப்பல் அதிபர்கள் மதன் ஆனந்த் பவார், சுரேஷ் ஆனந்த் பவார் ஆகியோர் மும்பையில் தலைமறைவாக இருந்தனர். சென்னை கோர்ட்டில் அவர்கள் முன்ஜாமீன் பெற்று இருந்தனர். அது காலாவதியாகி விட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. கப்பல் கம்பெனி இயக்குனர்களான சகோதரர்கள் மதன் பவார் (55), சுரேஷ் பவார் (51) ஆகியோரை தேடி வந்தனர். அவர்கள் புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புனேவுக்கு சென்ற போலீஸார், அண்ணன், தம்பியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரையும் போலீசார் இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர். பெசன்ட் நகர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 4 மாதங்களுக்குப் பின் கப்பல் அதிபர்கள் பிடிப்பட்டு இருப்பதால் பிரதீபா காவேரி கப்பல் வழக்கு விசாரணை மீண்டு ம் சூடு பிடித்துள்ளது.
கப்பல் நிறுவனம் தங்களது பிரதீபா காவேரி கப்பலை விற்று நிவாரணம் வழங்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு கப்பல் விற்கப்பட்டது. விலைக்கு வாங்கிய கப்பல் நிறுவனம் பிரதீபா கப்பலை கொண்டு சென்று விட்டது.
இதனால் அந்த கப்பல் தற்போது சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.