எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதையொட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை குறித்தும் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையொட்டி ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி லோக்சபை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்தது.
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வங்கிகடன் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் வங்கிக்கடன் கணக்குகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைக்குழு விவசாய கடன் தள்ளபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் எதிர்க்கட்சிகள் கிளப்பின.
நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து,விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சினையை எழுப்பினர். இந்த பிரச்சினையை சபையில் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை துணைத்தலைவர் கோபிநாத் முண்டே தலைமையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோரியதோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். மறுபக்கம் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்து வரும் கொடுமைகளை எடுத்துரைத்தனர். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தனர். லோக்சபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழுத்தலைவர் தம்பித்துரை எழுந்து இலங்கையில் தமிழர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதார தடையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். சபையின் மையப் பகுதிக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு குறித்து சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோரியதோடு கோஷங்களையும் எழுப்பிக்கொண்டியிருந்தனர். மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து லோக்சபையை சபாநாயகர் மீரா குமார் நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
ராஜ்யசபையிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் படும் துயரத்தையும் கொடுமையையும் நிரந்தரமாக போக்க வேண்டும் என்றால் இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுத்த கச்சத்தீவை இந்தியா திரும்ப மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிக்கொண்டியிருந்ததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால் ராஜ்யசபையும் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபை மீண்டும் கூடி
யதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரியபடி இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,