எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதையொட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை குறித்தும் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையொட்டி ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி லோக்சபை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்தது.
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வங்கிகடன் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் வங்கிக்கடன் கணக்குகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைக்குழு விவசாய கடன் தள்ளபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் எதிர்க்கட்சிகள் கிளப்பின.
நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து,விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சினையை எழுப்பினர். இந்த பிரச்சினையை சபையில் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை துணைத்தலைவர் கோபிநாத் முண்டே தலைமையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோரியதோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். மறுபக்கம் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்து வரும் கொடுமைகளை எடுத்துரைத்தனர். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தனர். லோக்சபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழுத்தலைவர் தம்பித்துரை எழுந்து இலங்கையில் தமிழர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதார தடையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். சபையின் மையப் பகுதிக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு குறித்து சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோரியதோடு கோஷங்களையும் எழுப்பிக்கொண்டியிருந்தனர். மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து லோக்சபையை சபாநாயகர் மீரா குமார் நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
ராஜ்யசபையிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் படும் துயரத்தையும் கொடுமையையும் நிரந்தரமாக போக்க வேண்டும் என்றால் இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுத்த கச்சத்தீவை இந்தியா திரும்ப மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிக்கொண்டியிருந்ததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால் ராஜ்யசபையும் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபை மீண்டும் கூடி
யதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரியபடி இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.