முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியா குமரியில் தாழ்வு நிலை: மழை நீடிக்கும்

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. இந்த நிலையில் மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று (நேற்று) காலை நகர்ந்து கன்னியாகுமரிக்கும், மாலத்தீவுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 12.செ.மீ., பேராவூரணியில் 11 செ.மீ., அறந்தாங்கியில் 9 செ.மீ., புதுக்கோட்டை- பட்டுக்கோட்டையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்ததின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (நேற்று). நாளையும் (இன்று) மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பாக்கலாம். நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியிலும் கனமழை பெய்யும். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். இவ்வாறு ரமணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago