முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் மத்திய அரசு மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.8 - இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட முக்கியமான பிரச்சினைகளை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை என்று அ.தி.மு.க. கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது நடந்த விவாதத்தில் ராஜ்யசபை அ.தி.மு.க.குழுத்தலைவர் மைத்ரேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இலங்கை தமிழர்கள் பிரச்சினை மற்றும் தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை. ஜனாதிபதி உரையில் இவைகள் இடம் பெறவில்லை என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீதும் மைத்ரேயன் குற்றஞ்சாட்டினார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். கடந்த முறை மாதிரி போதுமான ஆதாரம் இல்லாமல் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று மைத்ரேயன் கூறினார். இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகள் உச்சி மாநாட்டிலும் இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு போர் முடிந்தபோது இலங்கை தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அப்போதும் மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இருந்தது. அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த இரண்டு கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்றும் மைத்ரேயன் குற்றஞ்சாட்டினார்.

வலது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா பேசுகையில் தமிழர்கள் பிரச்சினையில் அமெரிக்காவுக்கு இந்தியா எதையும் விட்டுக்கொடுக்ககாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றார். இலங்கையில் நடந்த போரானது இந்தியாவின் உதவியுடன்தான் நடந்தது. ஜனாதிபதி உரையில் மக்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் எதுவும் இல்லை.

தெலுங்குதேச கட்சி உறுப்பினர் தேவேந்தர் கவுத் பேசுகையில் ஜனாதிபதி உரையில் மத்திய அரசின் குறிக்கோள் குறித்து எதுவும் கூறவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இதுவரை ரூ6.5 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்றும் தீவிரவாதிகளின் புகழிடமாக ஐதராபாத் இருக்கிறது என்றும் அங்கு அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடக்கிறது என்றும் கவுத் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்