எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - நாயகன் கருணாஸ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று சொந்த கிராமத்தை விட்டு பட்டணம் வருகிறார். ஆனால், அவர் எண்ணியபடி எழுத்தாளர் ஆவதில் சிக்கல்கள் உருவாகிறது. அப்போது இளம் வயதும், அழகும் கொண்ட நாயகி ஸ்வேதா பாஸ் இவர் பார்வையில் படுகிறார். இருவரும் பழகுகிறார்கள். கருணாஷின் வெள்ளந்தியான மனசு ஸ்வேதாவிற்கு பிடித்து விடுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த சூழலில் இன்னொரு நாயகன் ஹரீஸ் கல்யாண் பார்வையில் ஸ்வேதா படுகிறார். ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்த விபரம் தெரியாமல் ஹரீஸ் ஒருதலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் கருணாஷுக்கு தெரிகிறது. ஏற்கனவே எழுத்தாளர் ஜெ.கந்தன் (ஜி.எம்.குமார்) மனதில் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுத வேண்டும். அப்போதுதான் படைப்புகள் வலிமையானதாக இருக்கும். மக்கள் பாராட்டுவார்கள் என்று கருணாஸுக்கு ஆலோசனை கூறுகிறார். இதை நினைவில் கொண்டு தன் மனைவியிடம், நீயும் அந்த பையனை காதலிப்பது போல காதலி. அவன் எங்கெல்லாம் வர சொல்கிறானோ, அங்கெல்லாம் செல். இந்த சம்பவங்களை மையப்படுத்தி நான் கதை எழுதி பிரபலமாகி விடுவேன் என்கிறார் கருணாஷ்.
இதற்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தாலும், கணவரின் வளர்ச்சிக்காக ஹரீசை காதலிக்க சம்மதிக்கிறார் ஸ்வேதா. கதை உருவாகிறது. பிரபலமான பத்திரிகையில் கதை பிரசுரமாகி நினைத்தது போல பெரிய எழுத்தாளர் ஆகிறார் சந்தமாமா (கருணாஸ்). ஆனால் ஸ்வேதா- ஹரீஸ் காதல் நிறைவேறியதா? இல்லை கணவர் கருணாசை விட்டு ஸ்வேதா பிரிந்தாரா என்பது கிளைமாக்ஸ்.
அம்பாசமுத்திரம் அம்பாணி படத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம், நடிப்புக்கு தனி இடம் கொடுத்து கருணாஸ் நடித்திருக்கிறார். கிராமத்திலிருந்து மகன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவாக வரும் இளவரசு பணம் கொடுப்பதும், அதற்கான காரணத்தை ஸ்வேதாவிடம் சொல்லும்போது நெகிழ்ச்சி. அப்பா கொடுத்த பணத்தை வைத்து புக் எழுதி அது விற்பதற்காக கருணாஸ் எடுக்கும் அதிரடி தள்ளுபடி, கொட்டாச்சியை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை. தன் மனைவியை இன்னொருவன் காதலிக்கும்போது, அவளுக்கு உண்மையாகவே ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து, மறைந்து மனம் நொந்து காதல் காட்சிகளை கருணாஸ் பார்க்கும்போது, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படி படம் முழுக்க கருணாஸ் நடிப்பில் கவனம் செலுத்தியிருப்பது நன்றாக உள்ளது.
நாயகி ஸ்வேதா பாஸ் இளமை, அழகு, பதுமையாக படம் முழுக்க வருகிறார். கொடுத்த பாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் அவ்வப்போது கருணாஸுக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டுவது அருமை. இவர்களுடன் ஜி.எம்.குமார், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாண் கொட்டாச்சி சுஜாதா என பலரும் குறை சொல்ல இடம் வைக்காமல் நடித்துள்ளனர்.
ஆனந்தகுட்டன் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்களுக்கு இதமாக உள்ளது. வைரமுத்து வரிகளில் கூடங்குளம் அணுஉலை பாடல் மீண்டும் சேர்க்க தூண்டும் ரகம் காட்சிபடுத்திருப்பதும் அருமை. அதே போல நாராயணாநாராயணா பாடல் கருத்து செறிவு உள்ள பாடல். சமூக பார்வை மற்ற பாடல்கள் கமர்ஷியல் அம்சத்தை நிறைவு செய்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த்தேவா சூப்பர். ராம்நாத் வசனம் நச். இழுவை இல்லை.
எடிட்டிங் முரளி கோர்வை. கிளாசிக் சினிமாஸ் சார்பாக இணை தயாரிப்பு கே.உன்னிகிருஷ்ணன். தயாரிப்பு டி.வி.முரளி, கதை, திரைக்கதை, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன், வெளியீடு கென் மீடியா. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் சந்தமாமா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.