முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க நிர்வாகிகள் மறைவு: முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - அ.தி.மு.க நிர்வாகிகள் 4 பேர் மறைவுக்கு , தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.

திருப்பூர் புறநகர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு 6 வது வார்டு உறுப்பினரும், செல்லப்பம்பாளையம், ஊராட்சிக் கழக செயலாளருமான எஸ்.என்.ரத்தினசாமி, சாலை விபத்தில் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும். கோவை மாநகர் மாவட்டம், வீரபாண்டி  பேரூராட்சி கழக செயலாளர் என்.கிருஷ்ணன், வடசென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி, மீன் சேகர், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் , சேகல் ஊராட்சி மன்றத் தலைவர் அ.செல்வராணி ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டுமிகுந்த வருத்தமுற்றேன்.

ரத்தினசாமி , கிருஷ்ணன், மீன் சேகர் மற்றும் , செல்வராணி ஆகியோரை இழந்து  வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக்கொள்வதுடன்,மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்