எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்ர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெய்ல் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் தமிழக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளையும், நில உரிமையாளர்களையும் அழைத்து கருத்து கேட்டனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விவ சாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தனர்.
நேற்று 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்ர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், திருப்ர் கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அமர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்அமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்பட உள்ளது. விவசாயிகளும், நில உரிமையாளர்களும் எந்தவித தயக்கமும் இன்றி சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கூறலாம். உங்களுக்கு எவ்வளவு சென்ட் இடம் உள்ளது. அதில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள். இதனால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுங்கள் என்றார்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
வேலுச்சாமி (அவினாசி தாலுகா, அய்யன் தோட்டம்): எனக்கு 1 ஏக்கர், 1 சென்ட் இடம் உள்ளது. கடந்த பிப்ரவரி 13-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்தனர். உங்கள் விளை நிலம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம். 67 அடி இடத்தை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் சேதம் அடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர். எனக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது. மாற்றுப் பாதையில் குழாய்களை பதிக்க சொல்லுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார்.
பின்னர் சகஜநிலைக்கு வந்து வேலுச்சாமி கூறும்போது, தொழில் இல்லாத போது எங்களால் வாழமுடியாது. எனவே என்னை வாழ வழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன் என்றார்.
தலைமைச் செயலாளர் : கெய்ல் நிறுவனத்தினர் உங்களுக்கு ஏதாவது அத்தாட்சி தந்தார்களா?
விவசாயிகள் பதில்: எதுவும் தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அல்லது ஆற்றுப்படுகை வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க சொல்லுங்கள். விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் எல்லா விவசாயிகளும் என்னைப் போன்ற முடிவுக்குதான் வருவார்கள்.
விவசாயி வெங்கடசாலம் (பல்லாராயன்பாளையம்): எங்கள் விவசாய நிலத்துக்கு 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தார்கள். எனக்கு தென்னை மரங்கள் உள்ளன. இந்த இடம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள். அந்த குழாய் 2 அடி விட்டம் தான் உள்ளது. இதை பதிக்க 5 அடி அகலத்திற்கு இடம் போதுமானது. ஆனால் 67 அடிக்கு இடம் கேட்கிறார்கள்.
தலைமை செயலாளர்: உங்கள் நிலத்தில் ஓரமாக குழாய் செல்கிறதா? அல்லது நடுவில் செல்ல உள்ளதா?
விவசாயி: நிலத்தின் நடுவில்தான் குழாய் பதிப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் வந்ததால் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. இன்று மதியம் கிருஷ்ணகிரி, மாவட்ட விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கடைசி நாளான நாளை தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் அரசு சார்பில் வழங்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.