முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் யாசின் மாலிக் கைது

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், மார்ச்.12  - ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு சென்ற யாசின் மாலிக் அங்கு 7 மாதங்களுக்கு மேல் தங்கிஇருந்துவிட்டு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து அவர் இறங்கியதும் சிவசேனை கட்சியினர் அவரை எதிர்தது ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர் டெல்லியிலிருந்து காஷ்மீர் திரும்பினார்.  

டெல்லி விமான நிலையத்தில் வந்து அவர்  இறங்கியதும் போலீஸார் அவரைக் கைது செய்து சிறிதுநேரம் வைத்திருந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் விமான நிலைய பின் வாசல் வழியாக அவரை மைஸீமாவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

அவர் காஷ்மீர் திரும்பியதும் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி அவரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தை  தாக்கிய அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் 

தொடர்ந்து போராட்டடங்கள் நடைபெற்று வருகின்றன. அப்சல் குருவின் சடலத்தை தங்களிடம்தரும் வரைபோராட்டத்தை தொடரப் போவதாக பிரிவினைவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாகிஸ்தான் சென்ற மாலிக் அங்கு லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதை சந்கித்துப் பேசியது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் யாசின் மாலிக் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்