எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.14 - மீனவர்கள் ஆழ்கடலில் தொழில் செய்ய வசதியாக நாகை மாவட்டம், பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ரூ.78.50 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அப்பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.6.67 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மீனவர்களுக்கு உற்ற பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
மீன்வளத்தை மேம்படுத்தவும், மீன்வளத்தைப் பெருக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும், மீன்வளக் கல்வியை ஊக்குவிப்பது மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் தாலுக்காவில பனங்குடி மற்றும் நாகூர் முட்டம் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மீனவளப் பல்கலைக் கழகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை தமிழகத்தில் 11 இடங்களில் 37 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும், சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கு ஏற்றவாறு ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்தளம், உட்புற சாலை வசதி, தெரு விளக்கு வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்களை 63 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம் 13 மீன்பிடி நகரங்களின் மீன் பதப்படுத்தும் பூங்காக்களை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்து, அதன் அடிப்படையில் முன் மாதிரியாக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயன்பெறும் வகையில், கடலூர் மாவட்டம் பெரிய கங்கணாங்குப்பம் கிராமத்தில் 1.94 ஏக்கர் நிலப்பரப்பில் 14 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிராமத்தில் 2.19 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 23 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், என இரண்டு மீன் பதனிடும் பூங்காக்களை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஆழ்கடல் மின்பிடித் தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும் வசதி போதுமானதாக இல்லாததும், பதப்படுத்துதல், சேமிப்பு சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடையாக உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாகப்பட்டினம், பழையாறு, பூம்புகார், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், மீன்பிடித் தொழில் அதிக அளவில் நடைபெறும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியினை விரைவாக தொடங்கிடும் வகையில் முதற்கட்டமாக 6 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மீனவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்