முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை மீனவர்கள் 18 பேரை சிறைபிடித்தனர்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,மார்ச்.14 - ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 18பேர் 4படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர்  சுற்றிவளைத்து சிறைபிடித்து சென்றனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 652 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தலைமைன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளை சுற்றிவளைத்தனர். தங்கச்சிமடம் கொடைநகரை சேர்ந்த சந்தியா என்வரின் மகன் புண்ைடிராஜ், ராஜீவ்காந்தி நகர் ஆரோக்கியசாமி மகன் சூசை அருளானந்தம், சூசையப்பர்பட்டிணம் ராயப்பன் மகன் ராஜ், மற்றும் பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோரின் 4விசைப்படகுகளை பிடித்து சென்றனர். இந்த படகில் தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சுரேஷ், கெவி, ராபின், முருகன், சுடலை, அந்தோணி, இன்னாசி, காவீதம், ரீடன், ரிமோன், முத்து, முருகானந்தம், சாத்தன், திலீப், சுமன், ஆரோக்கியசாமி, முனியசாமி, சோபிஸ்டன் ஆகிய 18பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தலைமன்னார் அழைத்துச்சென்று இலங்கை கடற்படை முகாமில் வைத்துள்ளனர். இலங்கை தலைமன்னார் பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி சென்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவளத்தை அழிப்பதாகவும், இதனால் இலங்கை மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதன்காரணமாக இலங்கை மீனவர்கள் கடந்த 2நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை அரசு கடிதம் வழங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றிருப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா முயற்சியின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச்சென்றது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இதுகுறித்து உரிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago