முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. இலங்கை தமிழர்களுக்காக போராடி வருகிறது

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.14 - இழந்தசெல்வாக்கை மீட்பதற்காக திமுக இலங்கை தமிழர்களுக்காக  போராடி வருகிறது என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.   பாரதீயஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்தாண்டு கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் நீதிமன்ற ஆணை பெற்று சொந்த நாட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்களை திருப்பி அனுப்ப முடியாது என்ற இத்தாலியின் செயல் இந்தியாவை ஏளனப்படுத்துவதாகும். தற்போது இலங்கை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சினையில் வேறுபாடு பார்க்காமல் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ்- திமுக இலங்கைக்கு துணையாக இருந்து கொண்டு தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்துள்ளனர். காங்கிரஸ் இதில் தவறு செய்துள்ளது. எனவே அந்த கட்சி தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு வாக்குகூட அளிக்காமல் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசிடம் உறவு வைத்துள்ள திமுக டெசோ சார்பில் போராட்டம் நடத்துவது தமிழ் மக்களின் நன்மைக்காக இல்லை. இழந்து விட்ட செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகதான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்