எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மார்ச். 15 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக் குழுத் (ஜே.பி.சி) தலைவர் பி.சி. சாக்கோ விடுத்த கோரிக்கையை முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா நிராகரித்து விட்டார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. யான பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள் உள்பட 20 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு முன்பு சமீபத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அட்டார்னி ஜெனரல் வாகனாவதி கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான செய்திக்குறிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவால் அது திருத்தப்பட்டதாகவும், சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் யோசனையை அவர் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
வாகானாவதியின் இந்தக் கருத்தை ஆ. ராசா மறுத்தார். நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க விரும்பிய அவர், இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22 ம் தேதி மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதினார். மேலும் தி.மு.க. சார்பிலும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால், ஆ. ராசா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ அனுமதி அளிக்கவில்லை. இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ராசாவுக்கு சாக்கோ அனுப்பிய கடிதத்தில், 4 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு மட்டும் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு கூறியிருந்தார். இதைக் கண்டு தி.மு.க கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளது. சாக்கோவின் இந்தக் கோரிக்கையை ராசாவும் நிராகரித்து விட்டார். இதுகுறித்து சாக்கோவுக்கு அவர் எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கூட்டுக்குழு முன்பு நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவே விரும்புகிறேன். ஆனால், நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை கூட்டுக் குழு ஏன் விரும்பவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மேலும் இந்த பிரச்சனையில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ள பங்களிப்பு என்ன? என்பதை அறிவதற்காகத்தான் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கூட்டுக் குழுவின் முன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களுக்கும் நான் விளக்கம் அளிக்க முடியும். இந்த விவகாரத்தில் நான் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் யோசனைகளை நிராகரித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக சி.பி.ஐ.யோ அல்லது ஜே.பி.சி.யோ பிரதமரிடமோ அல்லது நிதியமைச்சரிடமோ எந்த வாக்குமூலமும் பெறவில்லை. எனக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதி தந்தால், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அரசாங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் சம்மதத்தின் பேரில் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.
மேலும் அட்டார்னி ஜெனரல் அளித்த சாட்சியம் அடங்கிய பிரதி எனக்கு அளிக்கப்படாத நிலையில், அதுபற்றிய எனது பதில் கேட்கப்பட்டு உள்ளது. நியாயமான விசாரணை நடைமுறை கொள்கைகளுக்கு மாறாகவே கூட்டுக்குழு விசாரணை உள்ளது. அட்டார்னி ஜெனரல் தெரிவித்த கருத்துக்களை மறுக்க எனக்கு முறைப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால், உண்மையில் நடந்தது என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சனையில் எனது தரப்பு கருத்தை கேட்டு அறியாமல் கூட்டுக் குழு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் திறந்த மனதுடன் விசாரணையை தொடருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராசா. இதன் பின்னரும் ராசாவை நேரில் ஜேபிசி அழைக்காவிட்டால், இலங்கை விவகாரத்தில் டெசோவின் போராட்டம் தீவிரமாகும் என்று கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.