Idhayam Matrimony

காவல் துறையினர் ஏழு பேர் குடும்பங்களுக்கு நிதிஉதவி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - பணிக்காலத்தில் காலமான காவல்துறையினர் 7 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம்  ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.ராமச்சந்திரன் 4.3.13 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

மதுரை மாநகர், சிறுவர் நல காவல் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி.ராஜசேகரன் 5.3.13 அன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியையும்,

சேலம் மாநகர், தெற்கு போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி.வெங்கடாச்சலம் 6.3.13 அன்று கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர்.மோகன்தாஸ் 8.3.13 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி.ஜெயராமன் 8.3.13 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ.கோவிந்தராஜ் 8.3.13 அன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியையும்,

சென்னை பெருநகர காவல், கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த யு.ராதாகிருஷ்ணன்  9.3.13 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன்.

காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்தாஸ், ஜெயராமன், கோவிந்தராஜ், ராதாகிருஷ்ணன்,  தலைமைக் காவலர்கள் ராமச்சந்திரன் மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லாணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல்நலக்குறைவால் காலமான உதவி ஆய்வாளர் ராஜசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், மற்றும் கோவிந்தராஜ், மாரடைப்பால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்தாஸ், ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் ராமச்சந்திரன், கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்து உயிரிழந்த தலைமைக் காவலர் வெங்கடாச்சலம் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்