முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கான நிவாரணங்களை வெளியிட வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 - விவசாயிகளுக்கான முழு நிவாரணங்களை நிதி நிலை அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வரும் கோரிக்கைகள் எதையும் ஜெயலலிதா பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் போராட்டப் பாதையில் சென்று கொண்டிருப்பதை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, ஏற்கனவே பெரும் துன்ப துயரத்திற்கு ஆளாகியிருக்கும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு விரைவில் வெளிவரவிருக்கின்ற நிதி நிலை அறிக்கையிலாவது முழு அளவிலான நிவாரணங்களை மேலும் காலம் தாழ்த்தாமல் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்; வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்