முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாரி தோண்டுவதை நிறுத்த நடிகர் மன்சூர்அலிகான் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.24 - இயற்கை வளங்களை காப்பாற்ற குவாரிகள் தோண்டுவதை நிறுத்தவேண்டும் என்று நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பூமி பந்தத்தை காப்பாற்றுங்கள். இந்த பூமி மலைகள், கடல், நதி அனைத்தும் இதில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சொந்தமானது. மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. ஜப்பானில் நிகழ்ந்த பூகம்ப பேரழிவு, நாளை இங்கும் நடக்கும். ஏனென்றால் ஜப்பான் வேறு கிரகத்தில் இல்லை. இந்த உலகம் காப்பற்றப்பட வேண்டுமானால், உடனடியாக உலக முழுமைக்கும், எங்கும் சுரங்கங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இயற்கைதந்த அரும் பெரும் கொடுப்பினை ஆகிய மலைகளை குடைவதும், தகரப்பதும் உடனடியாக தடுக்கப்படவேண்டும். மேலும் இந்த பூமிக்குள் வெடிகுண்டு வெடிப்பது அணுகுண்டுகளை வெடித்து பரிசோதிப்பது, ஹைட்ரஜன், நைட்ரஜன், பாம் என்று சோதனை நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல்,சிறிது காலங்களிலேயே இந்த உலகம் ஒருபொறி உருண்டையை நாலா பக்கமும் ஆணியால் குத்தினால் எப்படி உதிருமோ அதுபோன்று இந்த பூமி உருண்டை பொழ, பொழ ரென்று உதிர்ந்து விடும் வெடிகுண்டு சோதனையை நிறுத்தாவிட்டால், குவாரிகள் என்று பூமியை கிலோமீட்டர் கணக்கில் தோண்டிக்கொண்டே போவதை நிறுத்தாவிடட்ஆல், பூமியின் புவி ஈர்ப்பு விசை செயலிழந்து நிச்சயமாக உலகம் அழிந்துவிடும்.அது எப்படி ஆயிரமாயிரம் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த பூமி தன்னைதானே 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றிக்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிற இந்த பூமி மன்சூரலிகான் சொல்வது போன்று திடீரென்று எப்படி அழியும் என்று நீங்கள் கேட்கலாம். கோடி கோடிக்கணக்கான ஆண்டுகளாய் இந்த பூமி இயற்கையோடு பாதுகாப்பாக இருந்தது.எனவே இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரனங்களுக்கும் இந்த பூமி சொந்தம். இந்த பூமித்தாயை காப்பாற்ற உலக அளவில் அனைத்து அறிஞர் பெருமக்களும் திரண்டு உடனடியாக மிகப்பெரிய இயக்கம் தோற்றுவிக்கப்படவேண்டும். அய்யா புயல் வேக வாழ்க்கையில் சொத்து சுகம், வசதி என பேராசை வாழ்க்கை வாழ்கிறோம். அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போட்டு ஆயிரம் கோடி, லட்சம் கோடி, என மேலே மேலே சம்பாதிக்க, இப்படியே போக லட்சக்கணக்கான டன்கள் மணல் ஆற்று படுகைகளில் அள்ள இந்த பூமி பேராபத்தை நெருங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்