முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆய்வுக்குழுவை எவ்வாறு ஆலை நிர்வாகம் ஏமாற்றுகிறது என்பது பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:-

மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாnullர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, இரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90​களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவார் அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை இரத்து செய்தது.

குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் nullங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட துத்துக்குடி கடலோரத்தில், டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அனுமதி பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டல் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக்கூடாது என்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் வரையறுத்த சட்டவிதியை மீறி, 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அமைக்கப்பட்டது.

டெர்லைட் ஆலையைச் சுற்றி, 250 மீட்டர் சுற்றளவுக்கு, அடர்த்தியான பசுமைச்சூழல் அமைக்க வேண்டும் என்று, முதலில் நிபந்தனை விதித்த தமிடிநநாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருசில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகட் 18 ஆம் நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

மன்னார் வளைகுடாவில் உள்ள வான்தீவு, கசுவர், கரைச்சல்லி, விளாங்கு சல்லி ஆகிய தீவுகள், ஆலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே அமைந்து உள்ளன. தூத்துக்குடி வட்டார மக்களும், மீனவர்களும், விவசாயிகளும், பொதுநல அமைப்பினரும், ம.தி.மு.க.வும், தொடர் போராட்டங்களை நடத்தினர்.

உயர்நீnullதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு மீது, 98 டிசம்பர் 9 ஆம் நாளில் இருந்து 14 ஆம் தேதி வரையிலும், நானே வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினேன்.

வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் அன்று, சென்னை உயர்nullநீதிமன்ற nullநீதிபதிகள் எலைட் தர்மாராவ், பால் வசந்தகுமார்

அமர்வு நீnullதிமன்றம், தூத்துக்குடி டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, ஆணை பிறப்பித்தது.

அதனை எதிர்த்து, டெர்லைட் நிர்வாகம் உச்சnullதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தற்காலிகத் தடை ஆணை பெற்று உள்ளது. நிரந்தரமாக மூட வேண்டும் என்று நானும் உச்சnullநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த

nullநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு முறையும் பங்கு ஏற்றேன்.

கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் அன்று, உச்சnullநீதிமன்றம், நாக்nullரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக்கூடம் nullரி, துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆய்வு நடத்தி, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின்போது, எதிர்மனுதாரர்களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

40 நாள்கள் கழித்தே nullநீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி  தலைமையில்

ஆய்வுக்குழு ஏப்ரல், 6,7,8 தேதிகளில், டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆலை வளாகத்துக்குள் மண், நீnullர், மாதிரிகளை சோதனைக்கு இம்முறை எடுப்பது இல்லை என்று நீnullரி நிறுவனம் கூறியதற்கு, நான் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில், மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், நம்முடைய தரப்பில் மாதிரிகள் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், டெர்லைட் ஆலையால் காற்று மண்டலத்தில்

ஏற்படும் மாசு, நச்சுத்தன்மையைக் கண்டு அறியத் தேவையான கருவிகளை, nullரி ஆய்வுக்குழு கொண்டு வரவில்லை.

மீண்டும் ஆய்வு ஏப்ரல் 19 ஆம் நாள் தொடங்கியது. இதில், நானும், சுற்றுச்சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதா, துத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் ஜோயல்,மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

25 மீட்டர் சுற்றளவுக்கு, ஆலையில் அடர்ந்த பசுமைச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80,000 மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது. உயர்நீnullதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், வெளி இடங்களில் இருந்து, குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட, ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப்போய் நிற்பதும், ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்தவே, டெர்லைட் முயற்சிக்கிறது

என்பதையும், nullரி ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தோம்.

இந்த நச்சு உலோகங்களாலும், ஆர்சனிக், யுரேனியத்தாலும் மற்றும் ஆலையின் இயக்கத்தாலும் ஏற்படும் கதிர் இயக்கத்தைச் சோதனை செய்ய, ரேடான் ஆய்வுக்கருவிகளுடன், மும்பை நகரில் இருந்து ஆய்வாளர்கள் இருவர், ஏப்ரல் 21 ஆம் தேதி வந்தனர். எட்டு இடங்களில் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு இடத்திலும், ஒரு மணி நேரம் கருவி இயக்கப்பட்டது.

ஆலையின் திடக்கழிவுகள் குவிக்கப்படும் இடங்களிலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலையில் இருந்து நச்சுத்தன்மை மிக்க கழிவு nullரையோ, கழிவுப்பொருள்களையோ, வெளியில் கொண்டு போய் கொட்டப்படக்கூடாது என்பது, ஆலை கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனை

ஆகும். ஆனால், அனுமதி பெறாமலேயே விரிவாக்க வேலைகளில் ஈடுபட்டு உள்ள டெர்லைட் ஆலை, வெளியேற்றப்படும் கழிவுகளைக் கொண்டு போய், விரிவாக்கப் பகுதியில், பெரிய அளவில் 18 குழிகளைத் தோண்டி, அதில், கழிவு nullநீரைக் கொண்டு போய் கொட்டி வைத்து இருப்பதை, nullநீரி ஆய்வாளர் டாக்டர் நந்தியிடம் எடுத்துக் கூறி, அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்தும், nullநீரின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச் சென்று உள்ளனர்.

19, 20, 21 ஆகிய நாள்களிலும், 22 முற்பகல் வரையிலும், டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும், ஆய்வின்போது, சுற்றுச்சூழல் ஆய்வு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதா, வழக்கறிஞர் ஜோயல், தராசு மகராசன் ஆகியோரும் பங்கு ஏற்றோம். வருகின்ற 29 ஆம் தேதி, உச்சnullநீதிமன்றத்தில் டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் நான்கு நாள்களே உள்ளன. nullநீர் நிறுவனம், உச்சnullநீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும்.

அந்த அறிக்கையைக் கண்டபிறகே, அதுகுறித்து நம்முடைய கருத்துகளைத் தெரிவிக்க இயலும்.

விவசாயிகள், மீனவர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசமாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாக்கவும், துய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, nullநீதிக்கான அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம்! இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்