முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க 12 மணி நேரமாகிறது

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, மார்ச். 18 - திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்தனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் தேர்வு மாதங்களாதலால் திரமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் பக்தர்களின் கூட்டம் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதாரணமாகவே காணப்பட்டது. தர்ம தரிசனத்துக்கு 12 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு 4 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரமும் ஆனது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்