முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம்,மார்ச்.19 - ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை நிதிஅமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று முன்தினம் வந்தனர். இந்த குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்தபின்னர் ராமநாதபுரம் வந்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் அங்கு செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அந்த புகைப்படங்களில் தமிழக முதல்அமைச்சரின் எழுச்சிமிகு சிந்தனை வாக்கியங்கள், பொன்மொழிகள் வைக்கப்பட்டிருந்ததை கண்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மகிழ்ந்து பாராட்டினர். அப்போது, அமைச்சர் டாக்டர்.சுந்தரராஜ், கலெக்டர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, முருகன்,எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் ரோசன்குர்ஷிதாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்