எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.19 - இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சல் மிக்க முடிவை இந்தியா எடுக்கும் என தாம் நம்புவதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் உலக நாடுகளின் ஆதரவை இந்தியா கோர வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெற்ற கடைசி கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள கண்டனங்களையும் இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானங்களையும் இலங்கை அரசு நிராகரித்து இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த தருணத்தில் ஐ.நா. சபையில் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இந்தியா வலுவான நிலையை எடுப்பதும் தீர்மானத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுதந்திரமான திருத்தங்கள் கொண்டு வருவதும் அவசியமாகும்.
இந்த விஷயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகவும் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுகுடி அமர்த்தப்பட்டு அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெறும் வரை இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8.6.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் 14.6.2011 அன்று தங்களிடம் நான் மனு ஒன்றை கொடுத்ததையும் அதனை தொடர்ந்து 25.6.2011 அன்று தங்களுக்கு கடிதம் எழுதியதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இதனை தொடர்ந்து 2012 பிப்ரவரி 29-ம் தேதியன்றும் 2012 மார்ச் 6-ம் தேதியன்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 19வது கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக வலுவான ஒரு நிலையை எடுக்குமாறு நான் உங்களை வலியுறுத்தி இருக்கிறேன். தமிழக மக்களின் உணர்வு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் எனது கடிதங்கள் மூலமாக மனித உரிமை கவுன்சிலின் 19வது கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்த தீர்மானத்தின்படி பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழு அளித்துள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்த தீர்மானம் மிதமானது என்பது மட்டுமின்றி ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த நிபுணர் குழு தெரிவித்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அல்ல. மேலும் இந்திய அரசின் வழிகாட்டுதல் படியே இந்த குழுவின் அறிக்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆன பிறகும் கூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நிகழ்வுகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று கொண்டிருப்பதற்கு ஐ.நா. மனித உரிமைக்குழுவின் அலுவலகம் அளித்துள்ள அறிக்கையே சாட்சியாகும். பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் மனித உரிமை குழு தெரிவித்திருக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கி தமிழர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இலங்கைத் தமிழர்கள் இன்னமும் 2-ம் தர குடிமக்கள் போல் நடத்தப்பட்டு அடிக்கடி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் இலங்கை அரசு நியாயமான விசாரணை நடத்தவும் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த தருணத்தில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கை ராணுவம் நடத்திய அராஜகம் மற்றும் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச அளவில் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் அரசியல் சட்டப்படி சமஉரிமைகள் பெற்று கண்ணியமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அதோடுமட்டுமின்றி மனித உரிமைகளை காப்பதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் இந்தியா உலகளவில் தலைமையேற்க வேண்டியதும் அவசியமாகும்.
ஆனால் கடந்த சிலநாட்களுக்கு முன் இந்த விஷயத்தில் நீங்களும் வெளியுறவு அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகள் எனக்கு வருத்தத்தை தருகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை மனித உரிமை மீறல் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உங்களது அறிக்கைள் அமையவில்லை. ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வரும் வேளையில் கூட இந்தியா இன்னமும் மவுனம் கடைபிடிப்பது ஏமாற்றம் தருகிறது.
இந்த விஷயத்தில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். நடந்த தவறுகளுக்கு இலங்கையை பொறுப்பாக்கி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தும் அமெரிக்காவின் நகல் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்த தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து அதனை வலுப்படுத்தி தீவிரமாக அமல்படுத்துவதற்கும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அமைத்த குழுவின் அறிக்கை இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையை விட கூடுதலான அம்சங்களை கொண்டதாகும்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இன்னமும் நீடித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாகும்.
தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்குவதற்காக இலங்கை அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை 6 மாதத்தில் முடிக்கப்பட்டு அதன் அறிக்கை 2014-ல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை குழுவின் 25 வது கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டு இதுபற்றிய திருத்தங்களை அமெரிக்காவின் தீர்மானத்தில் இணைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இந்திய தூதரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதுமட்டுமின்றி மனித உரிமைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறவும் குறிப்பாக தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளுடன் பேசி அவற்றின் ஆதரவை பெறவும் இந்தியா முயற்சிக்க வேண்டும்.
இந்த தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சல் மிக்க முடிவை ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளை காப்பதற்காகவும் இந்திய அரசு எடுக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய முடிவை இந்தியா எடுத்து இலங்கையில் பாரபட்சம் காட்டப்பட்டு அவதிப்பட்டு வரும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் உலகெங்கும் வாழும் பிற தமிழர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.