எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்ர், மார்ச்.19 - தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதைப்போல மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார். திருப்ர் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் பாசறை எழுச்சி தின விழாபொதுக்கூட்டம் 15. வேலம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாசறை மாவட்ட செயலாளர் ஏ.எம்.சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யுவராஜ் சரவணன், மாவட்ட இணை செயலாளர் வி.எம்.கோகுல், வேலம்பாளையம் நகர பாசறை செயலாளர் தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். வேலம்பாளையம் நகர கழக செயலாளர் வி.கே.பி.மணி, பாசறை மாவட்ட துணைச் செயலாளர் ராயபுரம் பி.பரமராஜன், இணையச் செயலாளர் பி.ஏ .சித்ரா உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்ர் மாநகர் மாவட்டத்தில் 11 கிளைகளுடன் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை துவக்கப்பட்டது.பின்னர் படிப்படியாக கிளைகள் துவக்கப்பட்டன. கடந்த தி.மு.க.ஆட்சியில் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி தவித்த தமிழகத்தை மீட்க இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வைத்த கோரிக்கையை ஏற்று நீங்கள எல்லாம் அயராமல் பாடுபட்டு தேர்தல் பணியாற்றி கழகம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து முதல்வர் ஜெயலலிதா 3வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க அயராது பாடுபட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்காக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை. தமிழக மக்களும் அந்த 3 ஆண்டில் உன்னதமான திட்டங்களை பெறவில்லை. இலவசம் என்ற பெயரில் கருணாநிதி டி.வி.யை வழங்கி தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாழ மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக பாடுபடுகிறார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு முறையாக வழங்கிய வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் அளவை பாதியாக குறைத்துவிட்டனர். வருடத்திற்கு 12 கியாஸ் சிலிண்டர் வழங்கி வந்ததை தற்போது 6 ஆக குறைத்து வழங்கி வருகிறார்கள். இப்படி பல்வேறு வகையில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய அரசு. முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு பயன்படக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை இந்தியாவில் மற்ற மாநில தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெறுகின்றனர். தமிழக மக்களிடமிருந்து ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று மந்திரி பதவிகளை அனுபவித்து வரும் தி.மு.க., காங்கிரஸ்காரர்களும் வாயை திறப்பதில்லை, கொடுப்பதை தடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. தமிழத்தில் தற்போது நிலவும் மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியாளர்களால் உருவானதாகும். முதல்வர் ஜெயலலிதா 2001 -2006 ஆம் ஆண்டுகளில் தமிழத்தை ஆட்சி செய்த போது தமிழகம் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகவும், இந்தியாவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் மின் மிகை மாநிலமாக விளங்கியது.
ஆனால் கடந்த 2006-2011 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எந்தவித திட்டத்தையும் போடாத காரணத்தால் இன்று தமிழகத்தல் கடுமையான மின்வெட்டு பிரச்சினை நிலவி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா மின்சார உற்பத்திக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இன்று மின்வெட்டு பிரச்சினையை படிப்படியாக குறைத்து வருகிறார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை முற்றிலும் நீக்கப்பட்டு தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு தேவையான நிதியையும், திட்டங்களையும் பெற முடியும்.கேட்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது, தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள பெற்றுள்ளது போல் இந்தியாவில உள்ள மக்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை பெறுவார்கள்.
எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததுபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை அகற்ற இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை முதல்வர் ஜெயலலிதா உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சக்தி கோதண்டம், திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ், சிதம்பரம் கோ.ஜெயவேல், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வடக்கு தொகுதி செயலாளரும், 2வது மண்டலத் தலைவருமான ஜெ.ஆர்.ஜான், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முதல் மண்டலத் தலைவருமான வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, மாவட்ட அண்ணா தொழிற்ச்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் மார்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, டாக்டர் சீனியம்மாள்., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் வெ.அய்யாசாமி, ஓன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், சார்பு அணி நிர்வாகிகள் சாகுல்ஹமீது, தேவராஜ், தம்பி மனோகரன், கருணாகரன், ஏ.எஸ்.கண்ணன், பி.பார்த்தீபன், சி.எஸ்.கண்ணபிரான்,
மாவட்ட நகர, ஒன்றிய பாசறை நிர்வாகிகள் மோகன் தம்பி, மயில்ராஜ், சுப்பு என்ற சுப்பிரமணி, எம்.கே.எம்.கணேஷ், ஏ.தங்கராஜ், பி.விஜயகுமார், ஜி.சந்திரசேகர்,.புகழேந்தி, பதி, செந்தில், லோகநாதன், பரமேஷ், சரவணன், முத்துகுமார், சந்துரு, குரு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பாசறை பொருளாளர் செந்தமிழ் அரசு நன்றி கோரினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.