எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புட்டபர்த்தி,ஏப்.- 25 - ஆன்மீக குரு புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா கிட்டத்தட்ட ஒரு மாத உயிர் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலமானார். அவரது உயிர் நேற்று காலை 7.40 மணியளவில் பிரிந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சாய்பாபாவின் உடல் புதன்கிழமையன்று நல்லடக்கம் செய்யப்படும். ஆந்திர மாநில மக்களால் புட்டபர்த்தி சாய்பாபா என்று அன்போடு அழைக்கப்பட்ட சாய்பாபாவின் உடல் நிலை கடந்த சில நாட்களாகவே மோசமான நிலையை அடைந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரை கவனித்து வந்த டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஏ.என். சபையா 2 தினங்களுக்கு முன் கூறுகையில்,
சாய்பாபாவுக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவரது கல்லீரல் செயல்படவில்லை என்றும் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருப்பதாகவும் இது தங்களுக்கு பெரும் கவலையளிப்பதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார். அவரது இதய துடிப்பு குறைந்து வருவதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார்.
மேலும் சாய்பாபாவின் உடல் நிலை தேற வாய்ப்பே இல்லை என்றும் டாக்டர்கள் கூறினர். ஆனால் அவரது பக்தர்களோ, சாய்பாபா நோயில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் ஆன்மீக குரு சாய்பாபா, நேற்று காலையில் காலமானார். அவரது உயிர் காலை 7.40 மணியளவில் பிரிந்ததாக டாக்டர் சபையா தெரிவித்தார்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்தவர் சாய்பாபா. கடந்த 28 நாட்களாக இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, இருதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் இவரது உடலின் முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தன. இதையடுத்து ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை இவரது உயிர் பிரிந்தது.
உயிர் பிரிந்தது:
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் இவரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை ஸ்ரீசத்யசாய் உயர் மருத்துவ விஞ்ஞான மையம் என்பதாகும். இந்த மருத்துவமனையிலேயே நேற்று சாய்பாபாவின் உயிர் பிரிந்தது. சாய்பாபாவின் மரணம் பற்றிய தகவலை இந்த மையத்தின் இயக்குனரும், பிரபல டாக்டருமான சபையா அதிகாரபூர்வமாக தெரிவித்தார். சாய்பாபா உடலால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது பக்தர்கள் மருத்துவமனையை நோக்கி திரண்டு வர வேண்டாம். மிகுந்த பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும். முறைப்படியான இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று டாக்டர் சபையா கேட்டுக் கொண்டார். சாய்பாபாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் சாய் குல்வந்த் ஹாலில் வைக்கப்படும். பின்னர் புதன் கிழமையன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
வாழ்க்கை வரலாறு:
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்ட சத்ய சாய்பாபா, 1926 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது தாயார் பெயர் ஈஸ்வரம்மா. தந்தை பெயர் பெத்த வெங்கண்ண ராஜூ. நான்காவது குழந்தையாக பிறந்த பாபாவின் இயற்பெயர் ரத்னாகரம் சத்ய நாராயண ராஜூ என்பதாகும். சிறு வயதில் இருந்தே சாய்பாபாவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்து வந்தது. பின்னர் 1940 ல் இந்த ஈடுபாடு அதிகரித்தது. 1940 ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி சாய்பாபா சன்னியாச வாழ்க்கைக்கு மாறினார்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல இலவச மருத்துவமனைகளை துவக்கி வைத்தவர் சாய்பாபா. மருத்துவம், கல்வி, கிராம முன்னேற்றம் போன்ற பல துறைகளில் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றியவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 200 கோடி கொடுத்தவர் சாய்பாபா. இப்படியாக மக்கள் சேவையாற்றியதால் இவருக்கு உலகம் முழுவதும் நன் மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. சாய்பாபாவின் இறுதி சடங்கிற்கான பொறுப்பை ஆந்திர அரசு ஏற்றுள்ளது. அம்மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் இரங்கல்:
சாய்பாபாவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லட்சக்கணக்கான மக்கள் சாய்பாபாவின் நன்னெறிகளை பின்பற்றி ஊக்கமடைந்ததாக தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பு என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா விடுத்துள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்று கூறியுள்ளார். மறைந்த சத்ய சாய்பாபா சென்னையில் 1981 ம் ஆண்டு சுந்தரம் மந்திர் என்ற அமைப்பை நிறுவினார். இங்கு சாய்பாபா மறைந்ததையடுத்து நேற்று பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
பலத்த பாதுகாப்பு:
சாய்பாபா மறைவையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் ஆந்திராவை நோக்கி வரக்கூடும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புட்டபர்த்தியில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வேறு எந்த நிறுவனங்களுமே திறக்கப்படவில்லை. ஆந்திர மாநிலம் தற்போது சோகக் கடலில் மூழ்கியிருக்கிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அடுத்து ஆளப் போவது யார்?
ஆன்மீக குரு என்றும் பகவான் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். பகவானுடைய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் 35 ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாக கையிருப்பில் உள்ளன. பாபாவுக்கு பிறகு தங்களுக்கு நல்வழி காட்ட யார்? அவர் தொடங்கி நடத்தி வந்த அறப்பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை தற்போது அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லையாம். அவ நம்பிக்கைதான் நிலவுகிறதாம். 1964 ல் சத்யசாயி மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவராக இருந்தார். இதன் நிர்வாக குழு 2010 ல்தான் திருத்தி அமைக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல ஒரு புரிந்துணர்வு சுத்தமாக இல்லை. எனவே இந்த மிகப் பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற மாபெரும் கேள்விக்கு யாருக்கும் விடை தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.