முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் போராட்டம் தூய்மையானது: மணிவண்ணன்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச். 20 - குருதிச் சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதைக்க கொடுத்துவிட்டு, முள்வேலி கம்பிகளுக்குள் பசித்த வயிறோடு பரிதவித்து நிற்கும் நமது ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவர் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு. அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. 

இந்த மாணவர்களின் பட்டினிப் போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர்க் குற்றமல்ல, இனப்படுகொலை என்ற உண்மையான, உன்னதமான குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் குரல் உலகத்தின் செவிப்பறைகளை கிழிக்கும். கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும் எம் ஈழ உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரும் என்பது திண்ணம். உள்நோக்கமற்ற அறம் நிறைந்த எமது மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எமது செவ்வணக்கம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்