முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் கார்-பஸ் மோதல்: 8 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜல்பைகுரி, மார்ச்.20 - திருமண கோஷ்டி சென்ற காரும், பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் லெட்சுமிபுரா தேயிலை எஸ்டேட்  அருகே இந்த விபத்து நேற்று நடந்துள்ளது.

நாக்ரகதா என்ற இடத்தில் நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவர்கள் பநார்ஹட் என்ற இடத்துக்குச் சென்றபோது காரும்-பஸ்ஸூம் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்கவர்களில் 3 பேர் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள். காயமடைந்த 5 பேரும் உடனடியாக வடக்கு வங்காளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்