முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. மனைவிக்கு அரசுப்பணி

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

லக்னெள, மார்ச் 21 - உத்தரப்பிரதேச  மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. ஜியாவுல் ஹக்கின் மனைவி பர்வீன்  ஆஸாதுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில்  நடைபெற்ற  கலவரத்தின் போது,  ஜியாவுல் ஹக் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், குண்டா எம். எல்.ஏ. ராஜா  பையா மீது சந்தேகிக்கப்படுகிறது.  இந்நிலையில்,  ஹக்கின் மனைவி  பர்வீன்  ஆஸாத்  சிறப்புப்பணி அதிகாரியாக டி.ஜி.பி.  அலுவலகத்தில்  பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  செவ்வாய்க்கிழமை  அவர் பணியில் சேர்ந்தார்.  இதனை ஐ.ஜி.ஆர்.கே. விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்