முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழின அழிப்பில் தி.மு.க.வுக்கு பங்கு: பா.ஜ.க

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

கன்னியாகுமரி, மார்ச். 22 - இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கும், பாதிப்புகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மட்டுமல்ல, தி.மு.க.வும் முக்கிய காரணம் என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கடந்த 2009 ம் ஆண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழர்களை அழிக்க உதவிய மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. அதனால் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கும், பாதிப்புகளுக்கும் தி.மு.க.வும் முக்கிய காரணமாக இருந்தது. 

அந்த தவறை மறைப்பதற்காகவே டெசோ அமைப்பை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சி செய்கிறார். அதன் உச்சக்கட்டமாகத்தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல்கள் வரவிருப்பதை கணக்கில் கொண்டு தமிழ் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு நாடகம் போடுகிறார் கருணாநிதி என்று பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்