முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இக்பால்சிங் பதவி விலக் கோரி வரும் 27 ல் புதுச்சேரியில் பந்த்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி,ஏப்.- 25 - புதுச்சேரி துணைநிலை ஆளுனர் இக்பால்சிங் பதவி விலக கோரி வரும் 27 ம் தேதி புதுச்சேரியில் பந்த் நடைபெறும் என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி பாஸ்போர்ட் பெறுவதற்காக மாநிலங்களவை எம்.பியாக இருந்த போது இப்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுனர் இக்பால்சிங் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 25 ம் தேதி விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
இதைத் தவிர துணை நிலை ஆளுனரின் மகன்கள் மற்றும் ஆளுனர் அலுவலகத்தில் சிறப்பு பணி அலுவலராக பணியாற்றும் ஜே.பி. சிங்கின் மகன்கள் ஆகியோர் உள்ளடங்கிய அறக்கட்டளையினர் காரைக்கால் பகுதியில் மருத்துவக் கல்லூரி தொடங்க புதுச்சேரி அனுமதி அளித்தது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துணை நிலை ஆளுனர் இக்பால்சிங் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை இப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் போராட்டமும் நடந்து வருகிறது. இந்நிலையில் அ.தி.முக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு இநதிய கம்யூனிஸ்டு கட்சி செயலர் கலைநாதன் செய்தியாளர்களிடம் கூறும் போது, வரும் 27 ம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசம் 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்