எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.22 - வளர்ச்சியை மையமாகக் கொண்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவின்படி புதிய வரிவிதிப்புகளோ, தற்போது இருக்கும் வரிகளில் உயர்வோ இல்லை என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2013-14-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்பித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசின் சொந்த வரி வருவாய்:
பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மாநிலத்தின் வரி வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகளில், குறிப்பாக, உற்பத்தி துறையில் ஒரு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பொருளாதார நிலை சீரமைக்கப்பட்டு வருவதால், மதிநுட்பமிக்க கொள்கை முடிவுகளின் மூலம் 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட வரி வசூல் இலக்கு எய்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின் விகிதாச்சாரத்தில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக நமது மாநிலம் திகழ்கிறது. 2011-2012 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9.3 ஆக இருந்தது. 2012-2013 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி இந்த விகிதம் 10.3 ஆக உயர்ந்துள்ளது. ஒளிவு மறைவற்ற வரி நிருவாகம் மற்றும் திறமையான வரி வசூல் முறை ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின் சதவிகிதம் உயர்ந்து வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டிலும் இது சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.
அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்த பொருளாதார வளர்ச்சி போன்ற சூழ்நிலைகளில், மேம்போக்கான நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்தாது. நிதிச் சிக்கனம், முதலீடு செய்வதற்கான ஊக்கம், ஒளிவு மறைவற்ற நிருவாக அணுகுமுறை, ஆகியவையே மாநில அரசு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும். பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற சிறிய அறிகுறி தென்பட்டாலும், ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடைய தலைவர் அந்த அபாயத்தினை மதிப்பீடு செய்து பிரச்சனையினை தவிர்ப்பதற்குரிய வழியையே காணுவார். எனவே, முக்கியச் செலவினங்களுக்கும், நிதி ஆதாரங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பொதுவான மந்தநிலை, மாநில பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை கருத்தில் கொண்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிவிதிப்போ, நடைமுறையிலுள்ள வரி விகிதத்தினை உயர்த்துவதோ தேவையில்லையென முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.
2012-2013 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை காட்டிலும், 2013-2014 ஆம் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரிவருவாய் 17 சதவிகிதம் உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இலக்கு 86,065.40 கோடி ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. வணிக வரி 56,025.24 கோடி ரூபாயாகவும், ஆயத் தீர்வை 14,469.87 கோடி ரூபாயாகவும், மோட்டார் வாகன வரிகள் 4,881.15 கோடி பொயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், பத்திரப் பதிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 9,874.22 கோடி ரூபாய் வசூலாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கடன்
2012-2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நிகர பொதுக் கடன் 20,716 கோடி ரூபாயாகும். இருப்பினும், அரசின் கடன் சுமையினை கட்டுப்படுத்த அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் 15,675 கோடி ரூபாய் மட்டுமே 2012-2013 ஆம் ஆண்டில் நிகரக் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிகரக் கடன், மூலதனச் செலவினத்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், இந்த கடன் முழுவதும் மூலதனச் செலவுகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், கடனின் அளவு 24.5 சதவீதம் வரை இருக்கலாம் என்ற வரையறை இருந்தாலும், கடன் அளவு 18.98 சதவீதம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிகரக் கடன் அளவு 24,263 கோடி ருபாயாக இருப்பினும், மூலதன செலவிற்காக 21,142 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடனாகப் பெற இந்த அரசு உத்தேசித்துள்ளது.
நிதிநிலை குறியீடுகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த அரசு நிதி நிலைமையினை திறம்பட சீரமைத்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டில் 2,728.69 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்த நிலையில், கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளை வருவாய் உபரியோடு இந்த அரசு வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டு
வரவு-செலவுத் திட்டத்தில், 2,376 கோடி ரூபாய் வருவாய் உபரி இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாகவும், குறிப்பாக, இந்த அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் நிதி நிலைக்கு புத்துயிரூட்ட வழங்கிய நிதியுதவியினாலும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வருவாய் கணிசமாக குறைந்ததன் காரணமாகவும், திருத்த மதிப்பீட்டில் வருவாய் உபரி 451.52 கோடி ரூபாயாக மட்டும் இருக்கும். இருப்பினும், நிதிப் பற்றாக்குறை 19,889.31 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்,
2.88 சதவீத அளவில் மட்டுமே இருக்கும். இந்த இரண்டு வரையறைகளும் தமிழ்நாடு நிதிநிலைப் பொறுப்புடைமைச் சட்டம் 2003-இல் வரையறுக்கப்பட்டுள்ள குறியீடுகளுக்கு உட்பட்டும், பதின்மூன்றாவது நிதிக் குழுவின் வரையறைக்கு உட்பட்டும் உள்ளன.
2013-2014 ஆம் ஆண்டில் வருவாய் உபரி 664.06 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 22,938.57 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.84 சதவிகிதம் அளவிலேயே இருக்கும். இது நிர்ணயிக்கப்பட்ட அளவான மூன்று சதவீதத்திற்கு குறைவானதாகும்.
நிதிநிலை அறிக்கையின் இணைப்பில், இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக படிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
வளர்ச்சியை மையமாக கொண்டு, அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டத்தினை அளிப்பதற்கு இயன்ற அளவு முயன்றுள்ளேன். கடுமையான நிதி நெருக்கடி நிலவிவரும் சூழ்நிலையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய முயற்சிகளும், நடப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது விவாதம், மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறும் பொழுது முதலமைச்சராலும், அமைச்சர்களாலும் மேலும் பல அறிவிப்புகளும் திட்டங்களும் வெளியிடப்படும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடினமான இக்காலங்களில் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநிலம் வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகாமல், நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிட வேண்டும் என்ற நமது குறிக்கோளை நோக்கி பீடுநடை போடும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது.
தமிழக முதலமைச்சர், தாம் அரசியலுக்கு வருவதற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் திருவாக்கான
எழுமின்! விழிமின்!
வெற்றி இலக்கை எய்தும் வரை
நில்லாது செல்மின்
என்னும் கட்டளையை இதயத்தில் ஏந்தி, தமிழர்களின் நலம் - தமிழகத்தின் வளம்ா என்னும் குறிக்கோளை அடைந்திட பசி நோக்காது, கண் துஞ்சாது, ஓய்வு என்பதை அறியாது முதலமைச்சர் உழைத்து வருகிறார். அரிமா நோக்குடன் அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்து, மக்கள் நலன் ஒன்றையே முதன்மை நோக்கமாகக் கொண்டு, புதிய திட்டங்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்கி, இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளார். முதலமைச்சரின் தேர்ந்த நிர்வாகத் திறன், தெளிவான தொலைநோக்கு, திறன்மிகு அறிவாற்றல், ஆழ்ந்த அனுபவம், அளவிலா புத்திக் கூர்மை ஆகியவை இந்த வரவு-செலவுத் திட்டத்தை சிறப்புடன் வடிவமைத்திட வழிவகுத்துள்ளன. இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு வழிகாட்டியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகளை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கையினைத் தயாரிப்பதில் என்னோடு முழுமையாக ஒத்துழைத்த நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகத்திற்கும் அவருடன் அயராது பணியாற்றிய நிதித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துடன் 2013-2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிற்கு அவையின் ஓப்புதலைப் பெற்று தருமாறு, பேரவைத் தலைவர் அவர்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதையடுத்து, வரவு செலவு திட்ட அறிக்கையுடன் இடைப்பட்ட கால நிதி நிலவரத்திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.