முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வெளிநடப்பு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - சட்டசபையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா 10.20- க்கு வந்தபோது அ.தி.மு.க உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

10.27 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் வந்தார்கள். 10.30 மணிக்கு சபாநாயகர் திருக்குறளுடன் சபை கூட்டத்தை துவக்கினார். பின்னர் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்தை பட்ஜெட் தாக்கல் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய முற்பட்ட போது  சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்தை தெரிவித்தார். என்றாலும் பட்ஜெட் உரை தொடர்ந்து வாசிக்கப்பட்டது. எனவே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.- எம்.எல்.ஏ.க்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளியேறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்