முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி நில விவகாரம்: கே.என்.நேரு மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு உட்பட்ட குத்தகைக்கு விடப்பட்ட வக்பு வாரிய நிலத்தை திருப்பிக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

திருச்சி- கரூர் சாலையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் 2 ஆண்டுகள் குத்தகை காலத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டில் கொடுக்கப்பட்டது.

இந்த காலம் முடிவடைந்ததையடுத்து அந்த நிலத்தை திருப்பி கொடுக்குமாறு கலைஞர் அறிவாலய நிர்வாகத்துக்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்தார்.

இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி கோர்ட்டில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விபரத்தை மனுதாரர் தனது மனுவில் மறைத்துள்ளார். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்