முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுயானை தாக்கி 2 பேர் பலி: முதல்வர் நிதிஉதவி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - தாளவாடி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் காட்டுயானை தாக்கியதில் பலியான 2 பேர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவியினையும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-   ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் தாளவாடி உள்வட்டம் பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சொக்கள்ளிமல்லன் என்பவரின் மகன் மல்லு 15.3.2013 அன்று  தாளவாடி பகுதி அருகே காட்டு யானையால்  தாக்கப்பட்டு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கோயம்புத்தூர் மாவட்டம். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம்  தடாகம் ஒதுக்கு காடு அருகே 16.3.2013 அன்று சேலம் மாவட்டம், அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் வேடியப்பன்  காட்டு யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 17.3.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும்  துயரம் அடைந்தேன்.

காட்டு யானைகள்  தாக்கியதில் அகால மரணமடைந்த மல்லு மற்றும் வேடியப்பன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் துயரச் சம்பவங்களில்  உயிரிழந்த மல்லு மற்றும் வேடியப்பன்  ஆகியோரின் குடும்பங்களுக்கு  வனத் துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்